உதவி கேட்டு ஆலயக் கதவுகளைத் தட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
டிச.29,2012. திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகத்துக்கு 2011ம் ஆண்டில் நிதி உதவி கேட்டு
ஏழாயிரம் விண்ணப்பங்கள் வந்ததாகவும், ஏறக்குறைய ஒன்பது இலட்சம் யூரோக்கள் நன்கொடையாக
வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்
சூழலில் திருத்தந்தையின் பிறரன்பு அலுவலகத்துக்கு உதவி கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, இந்த அலுவலகத்துக்குப் பொறுப்பான பேராயர் Guido Pozzo
கூறினார். பொதுவாக இந்த அலுவலகம், உரோம் மறைமாநிலத்துக்கு மட்டுமே உதவும், ஆயினும்,
தற்போது பிற நாடுகளுக்கும், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும்
உதவி வருகின்றது என்றும் பேராயர் Pozzo கூறினார்