இங்கிலாந்து ஆயர் Conry : குடும்பத்தில் குழந்தையின் முக்கியத்துவத்தைச் சிந்திக்க அழைப்பு
டிச.29,2012. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவையொட்டி மேய்ப்புப்பணி
அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் Arundel மற்றும் Brighton மறைமாநில் ஆயர் Kieran
Conry, குடும்பம் மனித வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதால் எந்த விலை கொடுத்தும்
அதனைக் கட்டிக் காக்குமாறு கேட்டுள்ளார். ஒரு குழந்தைக்கு யாராவது ஒருவரது ஆதரவு தேவைப்படுகின்றது
என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Conry, குடும்பத்தில் குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள்
என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளுக்குத் தேவை என உணரும் மற்ற
காரியங்களோடு கிறிஸ்தவ விசுவாசத்தையும் நாம் எவ்வாறு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்
என்பதைச் சிந்திப்பதற்கு திருக்குடும்ப விழா நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் ஆயரின்
செய்தி கூறுகின்றது.