2012-12-28 11:04:37

மாஸ்கோ பேராயர் : கடவுள் நம் வாழ்வைப் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்


டிச.28,2012. நமது வாழ்வில் கடவுள் நுழைவதற்கு அனுமதிப்பதன் மூலம் நாம் ஒரு புதிய தொடக்கத்திற்கு வித்திடுகிறோம் என்று மாஸ்கோ கத்தோலிக்கச் சமுதாயத்திடம் கூறினார் மாஸ்கோ பேராயர் Paolo Pezzi.
வானதூதர் கபிரியேல் அன்னைமரியாவுக்கு மங்களச் செய்தி சொன்னது போல, கடவுளால் எல்லாம் இயலும் என்று கிறிஸ்மஸ் செய்தியில் கூறிய பேராயர் Pezzi, நாம் அவருக்கு விசுவாசமாக இல்லாவிடினும், அவர் நமது சுதந்திரத்தை மதித்து நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியில் இவ்வாறு கூறிய மாஸ்கோ பேராயர் Pezzi, கிறிஸ்மஸ் நள்ளிரவின் அமைதியும் மகிழ்ச்சியும் நமது வீடுகளை நிரப்பட்டும் என்றும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.