2012-12-28 11:09:26

பெண் உறுப்புகள் முடமாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானம்


டிச.28,2012. பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் நடவடிக்கையை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா.பொது அவை முதன்முறையாக விடுத்துள்ள அழைப்பு வரலாற்று சிறப்புமிக்கது, இது, உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்படுவதை நிறுத்தவதற்கான முக்கியமான முயற்சியாகும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயல், உலகில் இலட்சக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது மற்றும் இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கின்றது என்றும் கூறினார் பான் கி மூன்.
பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் வன்செயலால் உலகில் 14 கோடிப் பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.