2012-12-28 11:28:47

கவிதைக் கனவுகள்...... கண்ணீரின் இரகசியம் : கவிக்கோ அப்துல் ரகுமான்


’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வேண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணீரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்......







All the contents on this site are copyrighted ©.