கவிதைக் கனவுகள்...... கண்ணீரின் இரகசியம் : கவிக்கோ அப்துல் ரகுமான்
’இறைவா எனக்குப் புன்னகைகளைக் கொடு’ என்று பிரார்த்தித்தேன் அவன் கண்ணீரைத்
தந்தான் ‘வரம் கேட்டேன் சாபம் கொடுத்து விட்டாயே’ என்றேன் இறைவன் கூறினான்:
‘மழை வேண்டாம் விளைச்சலை மட்டும் கொடு’ என்று எந்த உழவனாவது கேட்பானா’ ஆனால்
நீ அப்படித்தான் கேட்கிறாய் கண்ணீரில் புன்னகையும் புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்......