மது, புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த "பாவ" வரி விதிப்பு: இந்திய அரசு முடிவு
டிச.22,2012. இந்தியாவில் மது மற்றும் புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த 2012-2017ம்
ஆண்டுக்கான 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நலவாழ்வு வரவுசெலவுப் பட்டியலில்"பாவ வரி"
என்ற புதிய வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 12வது ஐந்தாண்டுத் திட்ட
அறிக்கையை தேசிய வளர்ச்சிக் கழகம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்துள்ளது. அந்த
அறிக்கையில் புதிய வரிவிதிப்பின் மூலம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மது,
புகையிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புதிய வரி விதிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த
முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்த தேசிய வளர்ச்சிக்
கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.