2012-12-22 15:48:09

ஜெர்மனியில், டிசம்பர் 26 துன்புறும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்கும் நாள்


டிச.22,2012. இம்மாதம் 26ம் தேதியான வருகிற புதனன்று, உலகில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது ஜெர்மன் தலத்திருஅவை.
ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் எடுத்த தீர்மானத்தில், உலகில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 26ம் தேதியன்று அந்நாட்டின் அனைத்துப் பங்குகளும் செபிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
முன்னாள் கம்யூனிச நாடுகளில் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய கிறிஸ்தவர்களுக்காக 1994ம் ஆண்டுவரைச் செபித்து வந்த ஜெர்மன் தலத்திருஅவை, தற்போது உலகெங்கும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டுக்காகச் சிறப்பாகச் செபிக்கும் ஜெர்மன் தலத்திருஅவை, இவ்வாண்டு எகிப்து நாட்டுக்காகச் செபிக்கவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.