2012-12-21 15:11:46

தென் கொரியப் புதிய அரசுத்தலைவர் திறமையாகப் பணியாற்றுவார், தலத்திருஅவை நம்பிக்கை


டிச.21,2012. கடவுளின் அன்பும், அவரது எண்ணங்களும் ஆராய்ந்தறிய முடியாதவை என்பதை வெளிப்படுத்தும் பல அடையாளங்களில் ஒன்றாக, தென் கொரியத் தேர்தல்களில் Park Geun-hyeவின் கட்சி வெற்றி பெற்றிருப்பது இருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
தென் கொரிய அரசுத்தலைவர் தேர்தலில் Park வெற்றி அடைந்திருப்பது பலருக்குத் திருப்தியளிக்கவில்லை எனினும், புதிய அரசுத்தலைவரை இறைவனிடம் அர்ப்பணித்து அவருக்காகச் செபிப்பதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று Daejeon ஆயர் You Heung-sik கூறினார்.
60 வயதாகும் செல்வி Park, தென் கொரியாவில் முதல் முறையாக, பெண் ஒருவர் அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட பெருமையைப் பெறுகிறார்.
தற்போது அரசுத்தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள Parkன் தந்தை ஓர் இராணுவப் புரட்சியில் ஆட்சியை பிடித்தபின்னர் 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தவர் மற்றும் 1979 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.