உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Devprasad John Ganawa
டிச.21,2012. இந்தியாவின் உதய்ப்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, Jhabua மறைமாவட்ட
ஆயர் Devprasad John Ganawa அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். உதய்ப்பூர் மறைமாவட்டத்தை இந்நாள்வரை வழிநடத்திவந்த ஆயர் Joseph Pathalil
அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்ட எண் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமாவட்டத்திற்கு,
Jhabua மறைமாவட்ட ஆயர் Devprasad John Ganawa அவர்களை புதிதாக நியமித்துள்ளார். இறைவார்த்தை
துறவு சபையைச் சேர்ந்த ஆயர் Devprasad, 1951ம் ஆண்டில் பிறந்தவர். 1982ம் ஆண்டு குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2009ம் ஆண்டு மே 11ம் தேதி Jhabua மறைமாவட்டத்தின் இரண்டாவது
ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார். இவ்வெள்ளியன்று இவர் உதய்ப்பூர் மறைமாவட்டத்தின்
புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்ப்பூர்
மறைமாவட்டம், 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஆக்ரா உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு,
தனி மறைமாவட்டமாகச் செயல்படத் தொடங்கியது.