சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் துன்புறுகின்றனர்
டிச.20,2012. சிரியாவில் நிகழ்ந்துவரும் வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள்
துன்புறுகின்றனர் என்றும், இவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய குறைந்தது
50 இலட்சம் யூரோக்கள், அதாவது, 35 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கரித்தாஸ் அமைப்பு
உலக நாடுகளிடம் விண்ணப்பித்துள்ளது. குளிர்காலத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள
இம்மக்கள் தங்குவதற்கு சரியான உறைவிடங்கள், அருந்துவதற்கு சுத்தமான குடி நீர், மற்றும்
மருந்துகள் என்று பல வகையிலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று காரித்தாஸ் தெரிவித்துள்ளது. சிரியா,
லெபனான், ஜோர்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்புக்கள்
இணைந்து இந்த அவசரத் தேவைகளை நிறைவேற்ற தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.