டிச.19,2012. பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் என்ற மூன்று பரிசுகளை கீழ்த்திசை ஞானிகள்
குழந்தை இயேசுவுக்குக் காணிக்கையாக்கியதைப்போல், கிறிஸ்துவின் மறை உடலான திருஅவையும்
மூன்று பரிசுகளை இவ்வாண்டு பெற்றுள்ளது என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர். அண்மித்துவரும்
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் சார்பில் செய்தியை வெளியிட்டுள்ள
பேராயர் Richard Smith, ஆயர்கள் சிறப்பு மாமன்றம், நம்பிக்கை ஆண்டு, மற்றும் Kateri Tekakwitha
புனித நிலைக்கு உயர்த்தப்பட்டது ஆகியவை நாம் பெற்ற மூன்று கொடைகள் என்று கூறியுள்ளார். புதிய
நற்செய்திப் பணியில் ஈடுபட நம்மை அழைக்கும் ஆயர்கள் மாமன்றம், இவ்வுலகக் கொடைகளையும்,
தனி மனிதர்களின் மாண்பையும் ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் நற்செய்திப் பணி அமைய வேண்டும்
என்பதை நமக்குச் சொல்லித்தருகிறது என இச்செய்தி கூறுகிறது. நாம் அனைவருமே பயணிகள்
என்பதையும், வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி நாம் எப்போதும் பயணிக்கிறோம் என்பதையும்
நம்பிக்கை ஆண்டு நமக்கு சுட்டிக் காட்டுகிறது என்றும் கனடா நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள
கிறிஸ்மஸ் செய்தி எடுத்துரைக்கிறது.