கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஜெர்மனியில் ஆயிரம் கைதிகள் விடுதலை
டிச.18,2012. கிறிஸ்மஸ் பெருவிழாவை வரவிருப்பதை முன்னிட்டு ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய
ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய Rhineland-Palatinate நீதித்துறையின்
தகவல் தொடர்பாளர், கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு ஆயிரம் சிறைக்கைதிகள் நன்னடத்தை அடிப்படையில்
விடுவிக்கப்படவுள்ளனர் என்று அறிவித்தார். கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு
மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்தப் பொது மன்னிப்பு கிடையாது
என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா
மாநிலத்தில் 710 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். அதற்கு அடுத்ததாக, ஹெசி மாநிலத்தில்
150 முதல் 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.