2012-12-18 15:27:08

கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு எதிரான போர் தொடரும், பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை


டிச.18,2012. பிலிப்பீன்சின் நாடாளுமன்றமும் சட்டமன்றமும் கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளவேளை, இந்த மசோதாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்று அந்நாட்டு க்த்தோலிக்க ஆயர்கள் அரசியல்வாதிகளை இச்செவ்வாயன்று எச்சரித்துள்ளனர்.
நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காகவே கருத்தடை தொடர்பான மசோதாவுக்கு எதிரான தங்களது போராட்டம் தோல்வியடைந்திருப்பதைக் கடவுள் பொறுத்துக் கொண்டிருக்கிறார் என்றுரைத்த Batanes ஆயர் Camilo Gregorio, எனினும், கடவுள் தங்களது போரை தங்களுக்குச் சாதகமாக முடித்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் அரசுத்தலைவர் அலுவலகத்தின் தூண்டுதலாலேயே இம்மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார்கள், இது அரசுத்தலைவர் அலுவலகத்தின் ஊழலின் ஒரு பகுதி எனக் குறை கூறினார் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வு ஆணையத் தலைவர் ஆயர் Gabriel Reyes.
அரசியல்வாதிகள், இதில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் இதன்மூலம் அவர்கள் செய்தது சரியானதாக இருக்க முடியாது என Lingayen-Dagupan ஆயர் Socrates Villegas கருத்து தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.