2012-12-17 15:41:42

பேராயர் Maria Celli : திருத்தந்தையின் Twitterல் தொடர்பு கொண்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது


டிச.17,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இணையதளத்தில் தன் Twitter கணக்கைத் துவக்கிய ஐந்தே நாட்களில், அப்பக்கத்தின் வழியாக எட்டு மொழிகளில் அவரைத் தொடர்பு கொண்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சமூகத் தொடர்புக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli கூறினார்.
இன்றைய உலகில் Twitter இணையதளத் தொடர்பில் உள்ளவர்கள் 14 கோடிப் பேர் எனவும், இதில் 40 விழுக்காட்டினர் 18 வயதிற்கும், 34 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கூறப்படும் இந்நிலையில், இத்தகைய ஒரு சமூகத் தொடர்புச் சாதனம் வழியாக மக்களைச் சந்திக்க, திருத்தந்தையும் ஆவல் கொண்டுள்ளது இயல்பே என்று கூறினார் பேராயர் Maria Celli.
இன்றைய பரபரப்பான உலகில், சமூகத் தொடர்புச் சாதனங்களின் வேகம் முன்வைக்கும் சவால்களையும் திருஅவை அறிந்தே உள்ளது என்று கூறியப் பேராயர் Maria Celli, இது குறித்து மக்களுக்குக் கற்பிக்கவேண்டிய கடமையும் அதற்கு உள்ளது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.