2012-12-15 16:16:57

தங்கள் வரிப்பணம் கருக்கலைப்பு தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது - Tuscany மாநில மக்கள்


டிச.15,2012. தங்கள் வரிப்பணம் கருக்கலைப்பு தொடர்புடைய மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை இத்தாலிய அரசு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என அந்நாட்டின் Tuscany மாநில மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக, கரு தாங்கியப் பெண்களின் நலம் குறித்த விடயங்களுக்குத் தங்கள் வரிப்பணம் செலவிடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், இத்தாலியின் வாழ்வுக்கு ஆதரவான இக்குழுவினர்.
கரு தாங்கிய முதல் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம் என்ற இத்தாலியின் 1978ம் ஆண்டு சட்டப்படி, Tuscany மாநிலத்தில் மட்டும் 2010ம் ஆண்டு 7665 கருக்கலைப்பும், 2011ம் ஆண்டில் 7479 கருக்கலைப்பும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து 90 இலட்சம் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.