2012-12-14 15:48:28

பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு பெரும் தீமை இழைத்துள்ளது - கர்தினால் Tagle


டிச.14,2012. குழந்தைப் பேறு நலம் குறித்த சட்டத்திற்கு, பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் தீமை என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
14 ஆண்டுகளாக பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டம், இவ்வியாழன் அதிகாலையில் 113க்கு 104 என்ற மிகக் குறைந்த அளவு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை அலட்சியம் செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை எதிர்க்கும் திருஅவையின் போராட்டம் இன்னும் தொடரும் என்று கர்தினால் Tagle தெரிவித்தார்.
பேராயரின் கருத்தையொத்த எண்ணங்களை ஆயர்கள் Jesse Mercado, Ruperto Santos, Pedro Arigo உட்பட பல ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இப்போராட்டத்தைத் தொடரும் ஒரு வழியாகவும், மனசாட்சியுள்ள அரசியல் தலைவர்களை உருவாக்கும் ஒரு வழியாகவும், பொது நிலை கத்தோலிக்கர்கள் இணைந்து, அரசியல் கட்சியொன்றை உருவாக்கி, 2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பங்கெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.