உலக அமைதி வேண்டி, நீலகிரி மாவட்டத்தின் 600 கிராமங்களில் தீபப்பயணம்
டிச.13,2012. உலக அமைதி வேண்டி, ஊட்டியில் அனைத்து மதப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பல்லாயிரம்
விளக்குகளை ஏற்றி, மௌனப் பிரார்த்தனை நடத்தினர். இப்புதனன்று ஊட்டியில் இடம்பெற்ற
அமைதி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊட்டி இராமகிருஷ்ண மடத்தின் தலைவர்
சுகாத்மானந்தா, ""அன்பு மற்றும் அமைதியை மறந்து மேற்கொள்ளப்படும் செயல்களால், உண்மையான
வெற்றியைப் பெற முடியாது,'' என்று கூறினார். 12-12-12, இப்புதனன்று நண்பகல் 12 மணி,
12 நிமிடம், 12 நொடிக்கு, உலக அமைதியை வலியுறுத்தி, சங்கொலி எழுப்பப்பட்டதுடன், நீலகிரி
மாவட்டத்தில் உள்ள, 600 கிராமங்களில், உலக அமைதியை வலியுறுத்தி தீபப்பயணம் ஒன்றும் இடம்பெற்றது.