2012-12-13 16:00:36

ஈராக்கில் கர்தினால் Leonardo Sandri மேற்கொண்டுள்ள மேய்ப்புப் பணி பயணம்


டிச.13,2012. கீழைரீதி திருஅவைத் திருப்பீடப் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றும் கர்தினால் Leonardo Sandri, இவ்வியாழன் முதல் டிசம்பர் 17, வருகிற திங்கள் முடிய ஈராக் நாட்டில் மேய்ப்புப் பணி பயணம் செய்து வருகிறார்.
2010ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் நகரில் இருந்த மீட்பின் அன்னை மரியா சிரியன் ரீதி பேராலயம் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர், மேலும் 100க்கும் அதிகமானோர் பிணையக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளான இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு, டிசம்பர் 14 இவ்வெள்ளியன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிகழ்விலும், இதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று இப்பேராலயம் அர்ச்சிக்கப்படும் திருநிகழ்விலும் கலந்து கொள்ள கர்தினால் Sandri ஈராக் சென்றுள்ளார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று கல்தேய ரீதி கத்தோலிக்கர்கள் கொண்டாடும் திருமுழுக்கு யோவான் பிறப்பு விழாவன்று, கிர்குக் நகரில் உள்ள கல்தேய ரீதி கத்தோலிக்கப் பேராலயத்தில் நிகழும் திருச்சடங்குகளிலும் கர்தினால் Sandri கலந்து கொள்வார்.








All the contents on this site are copyrighted ©.