திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே நிலவும் உறவில் அதிகப் பிரச்சனைகள்
- திருப்பீடப் பேச்சாளர்
டிச.12,2012. சீனாவில் வாழும் கத்தோலிக்கத் திருஅவை தலைவர்களுக்கு அந்நாட்டு அரசும்,
அங்கு திருப்பீடத்தின் அனுமதி இன்றி செயல்படும் சீன ஆயர் குழுவும் இழைக்கும் அநீதிகள்
வருத்தத்தைத் தருகின்றன என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார். திருப்பீடத்தால்
நியமிக்கப்பட்ட ஆயர் Thaddeus Ma Daqin அவர்களின் ஆயர் நிலைக்குரிய தகுதியை நீக்கியுள்ளதாக
சீன அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆயர்கள் குழு அறிவித்தததைத் தொடர்ந்து, திருப்பீடத்தின்
சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை Lombardi, இவ்வாறு கூறினார். ஆயர் Ma
Daqin அவர்களின் திருநிலைப்பாட்டுச் சடங்கில் சீன ஆயர் குழுவின் பிரதிநிதியாகக் கலந்து
கொண்ட Zhan Silu என்பவர் தன் தலைமீது கைவைக்கக் கூடாதென்று ஆயர் Ma Daqin கூறியதைத் தொடர்ந்து,
அவர் ஒரு குரு மடத்தில் 'வீட்டுக் காவலில்' வைக்கப்பட்டார். அண்மையில், ஆயர் Ma Daqin
அவர்களின் ஆயர் நிலையை தாங்கள் விலக்கியுள்ளதாக சீன அரசின் ஆயர் குழு அறிவித்ததைக் கண்டு
திருப்பீடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இவ்வறிக்கை, திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும்
இடையே நிலவும் உறவில் அதிகப் பிரச்சனைகளை உருவாக்குகிறது என்றும் அருள்தந்தை Lombardi
தெரிவித்தார்.