2012-12-11 15:14:21

சர்வதேச சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்!- கானடா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்


டிச. 11, 2012. அனைத்துலக சமூகம் இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என கானடா நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கவலையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் பிரவுன் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, பிறிதொரு ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த்தும் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
தமிழர் தேசத்திற்கான போராட்டத்தில் இறந்தவர்களை அமைதியாக நினைவு கூர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாணவர்கள் காயப்படுத்தப்பட்டது மற்றும் தடுத்து வைக்கப்பட்டது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிடுவதாக வுட்வேர்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.