2012-12-10 16:12:30

திருப்பீடத்தூதர் வாகன விபத்தில் பலியானார்


டிச.10,2012. ஐவரி கோஸ்ட் நாட்டிற்கான திருப்பீடத்தூதர், இந்தியப்பேராயர் Ambrose Madtha டிசம்பர் 8, கடந்த சனிக்கிழமை, அமல உற்பவ அன்னை திருவிழாவன்று வாகன விபத்தில் உயிரிழந்தார்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் தலைநகர் Abidjanக்கு மேற்கேயுள்ள Biankoum என்ற நகரில் இடம்பெற்ற விபத்தில் திருப்பீடத்தூதரின் வாகன ஓட்டுனரும் உயிரிழந்தார். பேராயர் Madthaவுடன் பயணம்செய்த அவரின் செயலரும் அருட்சகோதரி ஒருவரும் படுகாயமுற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
1955ம் ஆண்டு இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள Belthangady எனுமிடத்தில் பிறந்த பேராயர் Madtha, 2008ம் ஆண்டு முதல் ஐவரி கோஸ்டின் திருப்பீடத்தூதராகப் பணியாற்றி வந்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.