டிச.08,2012. வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலம் மைனர் பசிலிக்காவாகத் திருத்தந்தை 23ம்
அருளப்பரால் உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள தன் பிரதிநிதியாக
கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனியை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். வேளாங்கண்ணி
திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவும், இந்திய இலத்தீன்
ரீதி ஆயர் பேரவை துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவும் வரும் ஆண்டு பிரவரி மாதம் 9 முதல்
11ம் தேதி வரை வேளாங்கண்ணியில் கொண்டாடப்படும்போது திருத்தந்தையின் பிரதிநிதியாக, நற்செய்தி
அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபிலோனி கலந்துகொள்வார்.