2012-12-08 16:19:52

பிறநாடுகளில் அடைக்கலம் மறுக்கப்பட்டு, அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் பற்றி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்


டிச.08,2012. ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ள தமிழர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாக, ஆஸ்திரேலிய அரசுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் இலங்கையின் மன்னார் ஆயர்.
பிறநாடுகளில் அடைக்கலம் கேட்டு, அது மறுக்கப்பட்டு, சொந்த நாட்டிற்கு மீண்டும் அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு வன்முறைகளையும், பாகுபாடுகளையும், அச்சுறுத்தல்களையும் சந்திப்பதாக, ஆஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
பிறநாடுகளில் அடைக்கலம் மறுக்கப்பட்டு, நாடு திரும்புகிறவர்கள், தேசத் துரோகிகளாக அரசாலும், இராணுவத்தாலும் நோக்கப்பட்டு, நடத்தப்படுவதாக ஆயர் இராயப்பு ஜோசப் தன் மடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும்போது, வேற்று நாடுகளில் அடைக்கலம் தேடி மறுக்கப்பட்ட மக்கள் நாட்டிற்குள் திரும்பிவருவது மிகவும் ஆபத்து நிறைந்ததாக உள்ளதென்று ஆயரின் மடல் வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.