2012-12-08 16:02:19

அனைத்துலக் மனித உரிமைகள் கருத்தரங்கில் திருப்பீட அதிகாரி உரை


டிச.08,2012. திருஅவைக்கோட்பாடுகள், தேசிய மற்றும் அனைத்துலகச் சட்டங்களோடு ஒத்திணங்கிச் செல்வதோடு, அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பில் திருஅவை எப்போதும் ஒத்துழைக்கிறது என்றார் கர்தினால் பீட்டர் டர்க்ஸன்.
போலந்தின் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அனைத்துலக மனித உரிமைகள் கருத்தரங்கில் இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்ஸன், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவைகள் ஊக்குவிக்கவும்படவேண்டும் என்றார்.
வாழ்வதற்கான உரிமை, அடிப்படைத்தேவைகள் நிறைவேறப்படுவதற்கான உரிமை, நலப்பணிகளைப் பெறுதல், வழிபாட்டிற்கான உரிமை, பொருளாதார உரிமைகள், குடியேறுவதற்கான உரிமைகள், அரசியல் உரிமைகள் என பல்வேறு உரிமைகள் பற்றியும் போலந்து கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றினார் கர்தினால் டர்க்ஸன்.








All the contents on this site are copyrighted ©.