2012-12-07 16:04:32

திருத்தந்தையுடன் Twitter வழியாக தொடர்பு கொள்ள பத்து இலட்சம் பேர் காத்திருப்பர்


டிச.07,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இம்மாதம் 12ம் தேதி Twitter வழியாக உலக மக்களுடன் தொடர்பு கொள்ளும் வேளையில், அவரைத் தொடர்வதற்கு, குறைந்தது பத்து இலட்சம் பேர் காத்திருப்பர் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சமூகத் தொடர்புத் திருப்பீட அவையின் செயலரான, பேரருள் தந்தை Paul Tighe, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு இவ்வியாழனன்று அளித்த பேட்டியொன்றில் திருத்தந்தை துவங்கவிருக்கும் Twitter குறித்த விவரங்களை வெளியிட்டார்.
டிசம்பர் 6, இவ்வியாழன் வரை pontifex என்ற இந்தப் புதிய முயற்சியைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 இலட்சம் என்று கூறிய பேரருள் தந்தை Tighe, ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 பேர் இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி திருத்தந்தை வத்திகானில் இருந்தபடியே, கணனியின் Tablet கருவியைப் பயன்படுத்தி, இத்தாலியில் Gubbio என்ற இடத்தில் ஒரு மலைச்சரிவில் மின் விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை ஏற்றிவைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.