2012-12-06 16:02:19

வாழ்வை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் அயர்லாந்து பாராளுமன்றத்திற்கு முன்பாக திருவிழிப்புப் போராட்டம்


டிச.06,2012. கருக்கலைப்பை ஒரு சட்டமாக கொண்டுவர முயலும் அயர்லாந்து அரசுக்கு எதிராக, இச்செவ்வாயன்று 8000க்கும் அதிகமானோர் பாராளுமன்றத்திற்கு முன்பாக இரவு திருவிழிப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் Enda Kenny, கருக்கலைப்பைச் சட்டமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதில்லை என்று கூறிய வாக்குறுதியை மீண்டும் அவருக்கு நினைவுறுத்தும் விதமாக இந்தத் திருவிழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
கிறிஸ்மஸ் வருவதற்கு முன்னர் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று பிரதமர் கூறியதைத் தொடர்ந்து, வாழ்வை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் அயர்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் Savita Halappanavar என்ற இந்தியப் பெண் இறந்தார் என்பதை ஊடகங்கள் பெருமளவில் பேசிவந்ததைத் தொடர்ந்து, இவ்விவாதம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்னும் வலுவடைந்துள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.