2012-12-06 16:06:56

பாலஸ்தீன நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி உதவியை அமெரிக்கப் பாராளுமன்றம் நிறுத்தப் போவதில்லை - கிறிஸ்தவ சபைகள் மகிழ்ச்சி


டிச.06,2012. பாலஸ்தீன நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி உதவியை அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளுமன்றம் நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்திருப்பதை அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் வெகுவாக வரவேற்றுள்ளன.
நவம்பர் 29, கடந்த வியாழனன்று ஐ.நா.பொது அவை எடுத்த வாக்கெடுப்பின் மூலம் பாலஸ்தீனம் ஒரு தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து எதிர்த்து வந்த அமெரிக்க ஐக்கிய நாடு, இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு வழங்கவிருந்த 440 மில்லியன் டாலர்கள், அதாவது, 2420 கோடி ரூபாய் நிதி உதவியை நிறுத்தப்போவதாக இத்திங்களன்று அறிவித்திருந்தது.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இந்த முடிவை மாற்றும்படி பாராளு மன்றத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்தன.
திங்களன்று வெளியிட்ட முடிவை நிறைவேற்றப்போவதில்லை என்றும், முன்னர் கூறியபடியே, அந்நாட்டுக்கு நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும் இப்புதனன்று பாராளு மன்றம் அறிவித்ததை அனைத்து கிறிஸ்தவ சபைகளும் மகிழ்வுடன் வரவேற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.