வியட்நாமின் மதவழிபாட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து மதநம்பிக்கையாளர்கள் கவலை
டிச.04,2012. மதவழிபாடுகள்மீது தீவிரக் கட்டுப்பாடுகளைக் கொணரும் சீனாவையொத்த சட்டம்
வியட்நாமிலும் வரும் சனவரி முதல்தேதி முதல் நடைமுறைக்கு வருவதையொட்டி வியட்நாம் மத நம்பிக்கையாளர்கள்
தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலங்களில் மதநடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை
தளர்த்தி வந்த வியட்நாம் அரசு, திடீரென சீனாவையொத்த மதக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை புகுத்துவது
குறித்து கவலையை வெளியிட்ட புத்த மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள், வியட்நாம் நாடு முன்னேற்றப்
பாதையில் பின்னோக்கிச் செல்வதாகத் தெரிவித்தனர். வியட்நாம் நாட்டில் மதசுதந்திரத்தின்
மீதான புதிய கட்டுப்பாடுகள் வியட்நாம் அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும்
பேச்சுவர்ர்த்தைகளை பெருமளவில் பாதிக்கும் என்ற கவலையையும் தலத்திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.