2012-12-04 14:52:56

நைஜீரியாவில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்


டிச.04,2012. நைஜீரியாவின் வடகிழக்குப்பகுதியில் 10 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றதோடு மூன்று கோவில்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர் இஸ்லாமிய தீவிரவாதிகள்.
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள Chibok என்ற நகரில் இம்மாதம் முதல் தேதி புகுந்த தீவிரவாதிகள் 10 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்ததோடு அங்குள்ள கிறிஸ்தவ வீடுகளையும் தீக்கிரையாக்கிச் சென்றனர். அதற்கு மறுநாள் Gamboru Ngala என்ற நகரில் மூன்று கிறிஸ்தவ கோவிலகளை தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர்.
Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக்குழுவே இக்கொடுஞ்செயல்களை ஆற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.