கிறிஸ்தவ நூல்களைக் கொண்டுவர முயன்றதற்காக கிறிஸ்தவர் ஒருவரை நாடு கடத்தியுள்ளது மாலத்தீவு
அரசு
டிச.04,2012. மாலத்தீவு நாட்டிற்குள் கிறிஸ்தவ நூல்களைக் கொண்டுவர முயன்றதற்காக பங்களாதேஷ்
நாட்டு கிறிஸ்தவர் ஒருவரை 23 நாட்கள் சிறையிலடைத்தபின் நாடு கடத்தியுள்ளது மாலத்தீவு
அரசு. மூன்று இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மாலத்தீவில் 100 விழுக்காட்டினரும் இஸ்லாமியர்களே
எனக்கூறும் அரசு, மாலத்தீவுக்கு வந்த கிறிஸ்தவ சமூக பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தில்
பணிபுரியும் Jathish Biswas என்பவர் 11 கிறிஸ்தவ புத்தகங்களை நாட்டிற்குள் கொண்டுவர முயன்றதற்காக
அவரை கைது செய்து சிறையிலடைத்தது. 23 நாள் சிறைவாசத்திற்குப் பின் தற்போது அவரை நாட்டைவிட்டு
வெளியேற்றியுள்ளது.