2012-12-01 14:44:14

நம்பிக்கை ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நற்செய்தியை வாசிக்குமாறு ஆந்திர ஆயர் ஜோசி வலியுறுத்தல்


டிச.01,2012. இந்த நம்பிக்கை ஆண்டில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து செபம் செய்து நற்செய்தியை வாசிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஆந்திர மாநில ஆயர் ஒருவர்.
கிறிஸ்துராஜபுரம் பங்கில் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்தி மறையுரையாற்றிய விஜயவாடா ஆயர் கோவிந்து ஜோசி, குடும்பங்களில் பெற்றோர் ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்குமாறும் கூறினார்.
1955ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துராஜபுரம் புனித பீட்டர் பங்கின் மொத்த மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டுக்கு அதிகமானோர் கிறிஸ்தவர்கள். விஜயவாடா மறைமாவட்டத்தில் 145க்கு மேற்பட்ட துறவற சபைகள் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.