டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto
நவ.30,2012. இந்தியாவின் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் Anil Joseph
Thomas Couto அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டெல்லி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வந்த பேராயர் Vincent Michael Concessao
அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்டம் எண் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, தற்போதைய
ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் Anil Couto அவர்களை, டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக
நியமித்துள்ளார். கோவா மாநிலத்தில் Pomburaவில் 1954ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி
பிறந்த ஆயர் Anil Couto, 1981ம் ஆண்டில் குருவானார். உரோமையில் உயர்படிப்பை முடித்துள்ள
இவர், 2011ம் ஆண்டில் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2007ம்
ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜலந்தர் ஆயராக நியமிக்கப்பட்டார்.