நேர்காணல் – இறைஊழியர் தேவசகாயம் - ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்
நவ.29,2012. டிசம்பர் 2, வருகிற ஞாயிறன்று நாகர்கோவில் கார்மேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
நடைபெறும் திருப்பலியில் இறைஊழியர் மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் முத்திப்பெற்றவராக அறிவிக்கப்படவிருக்கிறார்.
தமிழகத்தில் நடைபெறும் இந்த முதல் நிகழ்ச்சி பற்றி அறிவதற்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர்
பீட்டர் ரெமிஜியுஸ், இன்னும் அருள்திரு முனைவர் ஜான் குழந்தை, அருள்திரு கபிரியேல் (துணை
வேண்டுகையாளர்) ஆகிய மூவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். கன்னியாகுமரி மாவட்டம்
நட்டாலத்தில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்த இறைஊழியர் தேவசகாயம் 1752ம் ஆண்டு
சனவரி 14ம் தேதியன்று, ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.