நவ.29,2012. நவம்பர் 28, இப்புதனன்று, ஆல்பேனியா நாடு தன் சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச்
சிறப்பித்தையொட்டி, தன் வாழ்த்துக்களை அனுப்பிவைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தன்
சார்பில் இந்நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் Bar உயர்மறைமாவட்டப் பேராயர்
Zef Gashi வழியாக அல்பேனியா குடியரசின் தலைவர் Bujar Nishani அவர்களுக்கு, இந்த வாழ்த்துக்களை
நேரடியாக அனுப்பிவைத்தார் திருத்தந்தை. அமைதி, நீதி மற்றும் வளங்கள் பலவும் பெற்று
அல்பேனியா சிறந்து விளங்க வேண்டுமென்ற தன் செபங்களையும் ஆசீரையும் இவ்வாழ்த்தின் மூலம்
திருத்தந்தை அனுப்பிவைத்தார். 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள
ஆல்பேனியா நாடு, 1912ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி ஒரு குடியரசு நாடாக விடுதலை அடைந்தது.