இறைவன் வழங்கியுள்ள இயற்கை சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் – கொரியா,
ஜப்பான் ஆயர்கள்
நவ.28,2012. மனிதர்களுக்கு இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள சூரிய ஒளி, காற்று ஆகிய சக்திகளை
அறிவுள்ள வகையில் பயன்படுத்துவதால், அணுசக்தியை நம்பி வாழும் ஆபத்தான நிலையிலிருந்து
விடுதலை பெறலாம் என்று கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் கூறியுள்ளனர். கொரியா மற்றும்
ஜப்பான் ஆயர்கள் அண்மையில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் 'அணுசக்தியைப் படிப்படியாக அகற்றுவது'
என்ற தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இவ்வாண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும்
மேற்பட்ட ஆயர்களும் குருக்களும், தென் கொரியாவின் Gyeongju நகரில் இயங்கி வரும் அணுசக்தி
நிலையத்தைச் சென்று பார்வையிட்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இவ்விரு
நாடுகளின் ஆயர்களும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் ஒன்று கூடுவதாகத் தெரிவித்துள்ளனர்.