பட்டப் பகலில் எரிந்து கொண்டிருந்த தெரு விளக்கொன்று அணைத்து விட்டுப் போகச்
சொல்லி அருகில் அழைத்தது!
மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த தேசியக் கொடியொன்று வாஸ்துப்படி
முதலில் எப்பக்கம் அசைவது உசித்தமென்று தெரியாமல் தற்காலிகமாய் தரை நோக்கத்
தொடங்கியிருந்தது!