2012-11-26 14:58:17

கவிதைக் கனவுகள் – பள்ளிக்கூடம் - பாரதிமோகன்,சென்னை (வரப்பு என்ற இணையபக்கத்திலிருந்து)


பள்ளிக்கூடம்
அறிவை
அறிமுகம் செய்யும்
கோயில்...
அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம்

பள்ளிக்கூடம்
நட்பை
விதைக்கும் இடம்...

பள்ளிக்கூடம்
ஏடும்.. எழுத்தும் மட்டும்
அறியுமிடமில்லை
நாம் யாரென்று
நம்மை நமக்குக் காட்டுவதும்....
மனிதனை
மகானாக்குவதும்...
இந்தப் பள்ளிக்கூடமே...







All the contents on this site are copyrighted ©.