நவ.24,2012. சுற்றுலாவுக்கும் இசைக் கலாச்சாரத்துக்கும் புகழ்பெற்ற ஜமெய்க்காவில் ஏழைகளுக்குப்
பணி செய்வதற்குத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று அருள்திரு Richard Ho Lung கூறினார். கரீபியன்
நாடுகளில் ஒன்றான ஜமெய்க்காவில் புதிதாக மறைப்பணியைத் தொடங்கியிருக்கும் ஏழைகளின் மறைபோதகர்கள்
என்ற புதிய சபை, அந்நாட்டில் ஏழைகள் மத்தியில் தனது பணியைத் தொடங்கியுள்ளது என்று அச்சபையின்
தலைவர் அருள்திரு Richard Ho Lung கூறினார். ஜமெய்க்காவில் ஏழை-செல்வந்தர் இவர்களுக்கு
இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த அக்குரு, தங்களது சபையினர் சேரிகளில் ஏழைகளோடு
வாழ்ந்து, கழிவறைகளைச் சுத்தம் செய்தல், பல்துலக்கச் சொல்லிக் கொடுத்தல், சிறார்களைக்
குளிப்பாட்டுதல் போன்ற சாதாரண பணிகளைச் செய்து வருவதாகக் கூறினார். ஜமெய்க்கா தலைநகர்
Kingston, உலகின் மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும்வேளை, 27 இலட்சம் மக்களைக்
கொண்ட அந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்களால் ஆண்டுதோறும் 1,500க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.