2012-11-23 15:22:29

லெபனன் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


நவ.23,2012. லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை 15 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்.
லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi அவர்களைக் கர்தினாலாக உயர்த்தியிருப்பதற்குத் திருத்தந்தையிடம் நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர் Michel Sleiman. இவர், இச்சனியன்று வத்திக்கானில் இடம்பெறும் புதிய கர்தினால்கள் திருநிலைப்பாடு நிகழ்வுக்கு ஏறக்குறைய 500 பேருடன் உரோம் வந்திருக்கிறார். இந்த 500 பேரில் லெபனன் Hezbollah இசுலாமிய இயக்கத்தினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.