Down Syndromeஉள்ள குழந்தைகளுக்காகப் போராடும் ஸ்பானிய பிறரன்பு அமைப்பு
நவ.23,2012. Down Syndrome என்ற நிலையுடன் பிறந்துள்ள குழந்தைகள் இன்னும் மனித சமுதாயத்தில்
இயல்பாக இணைக்கப்பட முடியாமல் ஒதுக்கப்படுகின்றனர் என்று ஸ்பானிய பிறரன்பு அமைப்பு ஒன்று
கூறியது. இவ்வாரம் செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலகக் குழந்தைகள் நாளையடுத்து,
Down Syndrome உள்ள குழந்தைகளுக்காகப் பணிபுரியும் Down Spain என்ற அமைப்பு, அகில உலக
மனித உரிமைகள் ஒப்பந்தம் 7ல் கூறியுள்ளது இக்குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று சுட்டிக்
காட்டியது. ஸ்பெயின் நாட்டிலும், இன்னும் உலகில் பல்வேறு நாடுகளிலும் Down Syndrome
நிலையுடன் வாழும் குழந்தைகள் மனித சமுதாயத்தில் முழுமையாக இணைக்கப்படும் முயற்சிகளை அரசுகள்
மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் வெளியான
ஒரு புள்ளி விவரத்தின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும், Down Syndrome உள்ள குழந்தை
என்று கருவில் தெரிய வந்தால், 92 விழுக்காட்டினர் கருகலைப்பு செய்துகொள்கின்றனர் என்று
கூறப்படுகிறது.