2012-11-22 15:35:46

நேர்காணல் – சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய பேராயராக நியமனம் செய்யப்பட்டுள்ள பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுடன்..


நவ.22,2012. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக இப்புதனன்று (நவ.21) திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், 2008ம் ஆண்டு முதல் ஆப்ரிக்கக் கண்டத்தின் லைபீரியா, காம்பியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வருகிறார். லைபீரியா நாட்டுத் தலைநகரை மையமாகக் கொண்டு இந்த மூன்று நாடுகளிலும் இந்தப் பணியை ஆற்றி வருகிறார். 2005ம் ஆண்டில் கினி நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக நியமனம் செய்யப்பட்டார். 33 ஆண்டுகள் இந்தியாவைவிட்டு வெளியே வாழும் இவர், 26 ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றியிருக்கிறார். பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களை வத்திக்கான் வானொலிக்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.