2012-11-22 15:30:08

கவிதைக் கனவுகள் - வெற்றி உன் கையில்! ...(எழுதியவர் இராகவன் சரவணன், பெங்களூர்)


உன் சுயத்தை எது
எள்ளி நகையாடுகின்றதோ,
சுட்டெரிக்கிறதோ,
அங்கே நீ அக்கினியாய் மாறு.

நிதானத்தோடு கூடிய
கோபத்தீ உமிழ்! ஆனாலும்
உன் சுயம் உன்னால் அங்கே
காக்கப்பட வேண்டும், மறவாதே!

தன்மானம் இல்லாத மனிதர்
உயிரில்லா உடல்!
நீரில்லா மீன்!
காலில்லாச் செருப்பு!
வயிறில்லா உணவு!
பயனில்லை எதற்கும்!







All the contents on this site are copyrighted ©.