இந்திய இயேசு சபை அருள் பணியாளர் ஒருவருக்கு அமெரிக்க விருது
நவ.22,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Illinois மாநிலம் இந்திய இயேசு சபை அருள் பணியாளர்
ஒருவருக்குத் 'தலைச் சிறந்த சேவை' விருதை வழங்கியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்
சமூகப் பணியாற்றிவரும் இயேசு சபை அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்களுக்கு, Illinois
மாநிலத்தின் Harvey நகர மேயர் Eric Kellogg, இவ்விருதை அண்மையில் வழங்கியுள்ளார். குஜராத்
மாநிலத்தின் இயேசு சபையினர் நடத்திவரும் Prashant என்ற மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரான
அருள்தந்தை பிரகாஷ், 2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,
துணிவுடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதி இவ்வுலகில் நிலைநிறுத்தப்படும்
வரையிலும், நாம் யாரும் அமைதி காக்கமுடியாது என்பதை இவ்விருது எனக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது
என்று அருள் பணியாளர் பிரகாஷ் கூறினார்.