2012-11-21 16:36:58

தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தை இருவரும் வாழ்வதற்கு உள்ள உரிமையை பற்றி அயர்லாந்து ஆயர்கள்


நவ.21,2012 தாய் மற்றும் அவர் கருவில் வளரும் குழந்தை என்ற இரு உயிர்களும் வாழ்வதற்கு உள்ள உரிமையை உலகின் பல்வேறு மதங்களும், நன்னெறிகளும் வலியுறுத்திச் சொல்கின்றன என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
அயர்லாந்தில் வாழ்ந்த Savita Halappanavar என்ற இளம்பெண் கருவுற்றிருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளால் அக்டோபர் 28ம் தேதி அயர்லாந்தின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்குக் கருக்கலைப்புச் செய்வதற்கு மருத்துவர்கள் மறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால், Savita இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
கருக்கலைப்புக்கு எதிராக அயர்லாந்து சட்டங்களை பின்பற்றியதால், Savita மரணம் அடைந்தார் என்று கிளம்பிய ஒரு விவாதம், உலகின் பல நாடுகளில், முக்கியமாக, இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக ஊடகங்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவாதங்களின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான உணர்வுகளும் தூண்டிவிடப்படுகிறதென்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இத்திங்களன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில், Savitaவின் மரணம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் அவரை இழந்துள்ள குடும்பத்திற்கு தங்கள் அனுதாபங்களையும் அயர்லாந்து ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
Savitaவின் மரணத்திற்கான காரணங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.