2012-11-21 16:37:43

காசா எல்லைப்பகுதியின் இருபுறங்களிலும் வாழும் கத்தோலிக்கர்கள் செபங்களை எழுப்பிவருகின்றனர்


நவ.21,2012 இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு பகுதிகளிலும் வாழ்வோர் துன்பங்களைச் சந்திக்கின்றனர் என்பதால், எங்கள் செபங்கள் இருவருக்காகவும் எழுப்பப்படுகின்றன; ஏனெனில், நாடுகள் வகுக்கும் எல்லைகள் செபங்களுக்குக் கிடையாது என்று அருள்தந்தை Yoel Salvaterra கூறினார்.
காசா எல்லைப்பகுதியின் இருபுறங்களிலும் வாழும் கத்தோலிக்கர்கள், கடந்த பத்து நாட்களாக அப்பகுதியில் நிலவிவரும் தாக்குதல்களில் இன்னல்களைச் சந்தித்துவரும் அனைவருக்காகவும் செபங்களை எழுப்பிவருகின்றனர் என்று இஸ்ரேல் பகுதியில் வாழும் அருள்தந்தை Salvaterra கூறினார்.
இதற்கிடையே, காசாப் பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு, ATS எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, உலகெங்கும் வாழ்வோர் அனைவரிடமும் உதவிகள் வேண்டி விண்ணப்பித்துள்ளது.
காசாப் பகுதியில் நடைபெறும் இத்தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்து உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.