“இயேசுவின் குழந்தைப் பருவம்” குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகம்
நவ.20,2012. “இயேசுவின் குழந்தைப் பருவம்” குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்
புத்தகம் இப்புதன் முதல் விற்பனைக்கு வருகின்றது. “இயேசுவின் குழந்தைப் பருவ விளக்கங்கள்
: நாசரேத்தூர் இயேசு” (The Infancy Narratives: Jesus of Nazareth) என்ற தலைப்பில் Rizzoli
மற்றும் வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் இத்தாலிய மொழியில் அச்சிடப்பட்டுள்ள
இப்புத்தகம், ஆங்கிலம், ஜெர்மானியம், பிரெஞ்ச், குரோவேஷியம், போலந்து, போர்த்துக்கீசியம்,
இஸ்பானியம் எனப் பல மொழிகளில் ஐம்பது நாடுகளில் வெளியாகின்றது. வத்திக்கான் பத்தாம்
பத்திநாதர் அறையில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் திருப்பீட
கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, ரியோ டி ஜெனிரோ பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின்
இறையியல் பேராசிரியர் Maria Clara Bingemer, திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் இயேசு
சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி உட்பட சில பிரமுகர்கள் உரையாற்றினர். நாசரேத்தூர்
இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய மூன்றாவது புத்தகமாக, இயேசுவின்
குழந்தைப் பருவ விளக்கங்கள் குறித்த புத்தகம் அமைந்துள்ளது. இதன் முதல் பதிப்பில்
10 இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இப்புத்தகம் 72 நாடுகளில் பிரசுரிப்பதற்கு
உதவியாக, வருகிற மாதங்களில் 20 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.