மெக்சிகோவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்
நவ.20,2012. ஏறக்குறைய 11 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழும் மெக்சிகோவில் ஒரு கோடிக்கு
மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்று அந்நாட்டில் அண்மையில்
வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. மெக்சிகோவின் சமூக முன்னேற்றத்தை மதிப்பீடு
செய்யும் தேசிய அவையின் பொதுச் செயலர் வெளியிட்ட அறிக்கையில் அந்நாடு எதிர்கொள்ளும் அடிப்படை
பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குடிமக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கு முயற்சிகள்
எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், குறைந்த வருவாய், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, உணவுப்பொருள்களின்
விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் துன்புறுவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.