2012-11-20 15:34:40

அரபு ஐக்கிய குடியரசில் இந்தியர்களுக்கென பல்சமய கல்லறைத் தோட்டம்


நவ.20,2012. அரபு ஐக்கிய குடியரசில் வாழும் இந்தியர்களுக்கென பல்சமய கல்லறைத் தோட்டம் ஒன்று விரைவில் திறக்கப்படும் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் Vayalar Ravi அறிவித்தார்.
16 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் செலவில் 2013ம் ஆண்டு சனவரியில் புதிய பல்சமய கல்லறைத் தோட்டம் ஒன்று விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் Vayalar Ravi மேலும் கூறினார்.
இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் சார்பாக ஒரு இலட்சத்து 36 ஆயிரம் டாலர் கொண்ட காசோலையையும் அவர் வழங்கினார்.
துபாயிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, அரபு ஐக்கிய குடியரசில் ஆண்டுக்கு ஏறக்குறைய 1,300 இந்தியர்கள் வீதம் இறக்கின்றனர் என்று தெரிய வருகின்றது.







All the contents on this site are copyrighted ©.