2012-11-17 17:09:23

மனிதர்களாகிய நாம் இயற்கைப் பரிணாம வளர்ச்சியில் எதேச்சையாகத் தோன்றிய உயிர்கள் அல்ல - திருத்தந்தை


நவ.17,2012. மனிதர்களாகிய நாம் இயற்கைப் பரிணாம வளர்ச்சியில் எதேச்சையாகத் தோன்றிய உயிர்கள் அல்ல, மாறாக, கடவுளின் திட்டத்தில் வகுக்கப்பட்ட உயர்ந்த கொடைகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 16,17 - இவ்வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் போர்த்துகல் நாட்டில் நடைபெற்ற 'புறவினத்தார் முற்றம்' என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு, போர்த்துக்கல் மொழியில் வாழ்த்துச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்த, கிறிஸ்தவர்களும், பிற மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இக்கருத்த்ரங்கிற்குத் தன் வாழ்த்துக்களையும், செபங்களையும் இச்செய்தி வழியாக அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
உலகில் நிலவும் பிரச்சனைகளைக் கண்டு மருளும் மனிதர்கள், இறைவனை உலகினின்று அகற்றும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, மீண்டும் இறைவனை படைப்பனைத்தின் மையத்திற்குக் கொணர்வதே பிரச்சனைகளைத் தீர்க்க சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.