2012-11-17 17:09:10

'அட்லிமினா' சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.17,2012. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் ஊறியிருந்த பிரான்ஸ் நாட்டின் வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
'அட்லிமினா' எனப்படும் சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு ஆயர்களின் ஒரு குழுவினரை இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தான் 2008ம் ஆண்டு பாரிஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்டதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.
உலகில் தற்போது பல்வேறு துறைகளிலும் நிகழ்ந்துவரும் விவாதங்களில் திருஅவையின் குரலும் தொடர்ந்து ஒழிப்பதற்கு ஆயர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
தற்போது கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டில் நற்செய்தியின் படிப்பினைகளை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதில் எவ்விதத் தயக்கமும் நம்மிடையே எழக்கூடாது என்று திருத்தந்தை பிரான்ஸ் நாட்டு ஆயர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.